அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் முழுமையான நடைமுறைப்படுத்துதலை நாம் நீண்ட நாட்களாக ஊக்குவித்து வருகிறோம். இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது, தேசிய செயற்றிட்டம் வெளியிட்டமையை அமெரிக்கா வரவேற்கிறது.
தேசிய செயற்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றை மேலும் வலுவூட்டி அனைத்து குடிமக்களுக்கும் நன்மை பயக்கும் என நாம் நம்புகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.