சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்; பிரேம்குமார் குணரட்னம் கோரிக்கை
[Thursday, 09/08/2012 08:45 AM]
சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் வாழும் சிறுபான்மையான தமிழ்,முஸ்லீம் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
தமிழர்களுக்கு சுயநிர்ணய அதிகாரங்களை வழங்குதல் அல்லது அதிகாரப் பரவலாக்கம் வழங்குதல் ஆகிய தீர்வுத் திட்டங்களுக்கு எமக்கு உடன்பாடில்லை.
ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். பல்லின மக்களை பிளவுபடுத்தும் வகையிலான தீர்வுத் திட்டங்கள் பயனுள்ளதாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வாழும் சகல இன மக்களையும் இணைக்கும் வகையில் தீர்வுத் திட்டம்அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கை விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனவாத அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படுவதனைஎமது கட்சியானது ஒருபோதும் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தேசிய வெற்றியாகக் கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் உழைக்கும்வர்க்கத்தினருக்கு எதிராக செயற்பட்டனர்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் காணிகளை கைப்பற்றி இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.