கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிறீன் செனல் வழியாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்கள் பரிசோதனை செய்யப்படுவதில்லை.
இந்த வழியாக பிரபுக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.
இந்த வழியைப் பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களை கடத்த முயற்சித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் கிறீன் செனல் வழியாக பிரபுக்களை போன்று நாட்டுக்குள் பிரவேசிக்கும் போதைப் பொருள் வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுக்களை போன்று ஏற்கனவே நாட்டுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.